ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

முறையான மாதாந்திர ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சத்துணவு ஊழியர்களுக்கு முறையான மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூபாய் 3 லட்சம் வழங்கிட மாநில நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறித்தி ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, தமிழக அரசு தங்களை தொடர்ந்து புறக்கணிக்குமானால் காபந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் சத்துணவு ஊழியர்கள் செயல்படுவார்கள் என எச்சரித்தார். மேலும் 2 நாட்களாக ஏழை குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் போராட்டம் நடத்தி வரும் தங்களின்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்ததால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...