பெதம்பம்பட்டியில் ராமர் வேடம் அணிந்து குழந்தைகள் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்கினர்

கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பெதம்பம்பட்டியில் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேஷத்ர டிரஸ்ட் வேண்டுகோளுக்கு இணங்க இந்து அமைப்புகள் சார்பில் நால்ரோடு, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் குழந்தைகள் ராமர் வேடம் அணிந்து அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் மற்றும் அழைப்பிதழ் வழங்கினர்.



அப்போது இந்து அமைப்புகள் சார்பில் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசங்கள் இட்டவாறு சென்றனர். மேலும் இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் கூறும் பொழுது, பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் தற்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.



இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...