உடுமலை அருகே சுண்ணாம்பு உற்பத்தி நலிவடைவு; அரசு உதவிக்கு வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே சுண்ணாம்பு உற்பத்தி தொழில் நலிவு அடைந்து வருவதால், அதற்கு அரசு உதவியை கோரும் வலியுறுத்தல்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆலம்பாளையம் ஊராட்சியில் சுண்ணாம்பு உற்பத்திக்கு பெயர்பெற்ற கிராமமான கொத்தனூர், சுமார் 100 ஆண்டுகளாக சுண்ணாம்பு உற்பத்தி செய்து வருகிறது.



இங்குள்ள சுண்ணாம்பு கோவை, பழனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை ஆகும். ஆனால், நாகரிகத்தின் வளர்ச்சி, மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, பயன்பாடு குறைவு ஆகியவையால் சுண்ணாம்பு உற்பத்தி தொழில் அழிவின் விளிம்பில் நிற்கிறது.



சுண்ணாம்பு உற்பத்தியாளர் தெண்டபாணி பேசுகையில், இந்த தொழில் பாரம்பரியமும் பழமையும் மிக்கது என்று குறிப்பிட்டார். சுண்ணாம்பு உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களான அடுப்புக்கரி, தேங்காய் மட்டை, விறகு, ஓடை கற்கள் தேவை. சுண்ணாம்பு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஓடை கற்கள் கோவை மாவட்டத்திலிருந்து வாங்கப்படுகிறது.



இந்த ஓடை கற்கள் சூளையில் வேக வைக்கப்பட்டு, கால்சியம் சத்து மிகுந்த சுண்ணாம்பு தயாராகிறது. முன்பு 50 க்கும் மேற்பட்ட சூளைகளில் சுண்ணாம்பு தயாரிக்கப்பட்டு, மாட்டு வண்டிகளில் சுற்றுப்புற கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தது. இப்போது மூன்று சூளைகளில் மட்டுமே சுண்ணாம்பு தயாரிக்கப்படுகிறது. இது பாரம்பரிய மிக்க தொழில் ஆகும் என்பதால், இதன் அழிவை தடுக்க அரசு உதவியும் நிதி உதவியும் அளித்து உதவ வேண்டும் என தெண்டபாணி வலியுறுத்தினார்.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...