அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ள கருத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு வரவேற்பு


அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் இருதரப்பினரும் அமர்ந்து பேசி முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ள கருத்திற்கு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் இன்று வரை 3 நாட்கள் ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று அவ்வமைப்பின் இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபெல்லே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் இசுலாமிய பயங்கரவாத சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன தீர்மானம் உள்ளிட்ட விவகாரங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில் இருதரப்பினரும் அமர்ந்து பேசி முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ஜே.எஸ்.சேகர் கூறியுள்ள கருத்து குறித்து அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பான வழக்கில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எப்போதும் தொடர்பில்லை எனவும், இருப்பினும் ஆக்கப்பூர்வமான முடிவுகளை அளிக்கக்கூடும் என்பதால் இம்முடிவை ஆர்.எஸ்.எஸ் வரவேற்பதாகவும் ராம ஜென்ம பூமி அமைப்புகள் எடுக்கும் எந்த முடிவையும் ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனக்கூறிய அவர், பெரும்பான்மை மக்கள் தேர்வு செய்த பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி முடிவு இது எனவும் ஏற்கனவே பல முறை மக்கள் பிரதிநியாக பணியாற்றி உள்ள ஆதித்யநாத் சரியான தேர்வு என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடு முழுவதும் வளர்ந்து வருவதாகவும் தினந்தோறும் நடைபெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் உயர்ந்து தற்போது 57 ஆயிரமாக இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...