புத்தாண்டை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அருவியல் குவிந்துள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வால்பாறை சாலையில் ஆழியார் அணை ஒட்டி அமைந்துள்ளது குரங்கருவி எனப்படும் கவியரவி. இந்த அருவி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை, மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் உள்ள ஆழியார் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் கவியருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று புத்தாண்டை முன்னிட்டு அதிகரித்து காணப்படுகிறது.



இந்த நிலையில் இன்று கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் குவிந்துள்ளனர்.



மேலும் அருவியில் கொட்டி வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து உற்சாகமடைந்தனர்.



ஆனால் கவியருவியில் தடுப்பு சுவர் கம்பி போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதால் அச்சத்துடன் அருவியில் குளிக்கும் நிலை இருப்பதாகவும், எனவே தடுப்பு கம்பிகள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வால்பாறை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...