இஸ்லாத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்- அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு

கோவையில் கடந்த 16 ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாருக் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் அன்சர்த் என்பவர் சரணடைந்த நிலையில், படுகொலைக்கு அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 



பாரூக்-ன் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று கோவை அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் உமர் கூறியதாவது :- 

இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகும். இது யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. கடவுளை மறுப்பதும், வணங்குவதும் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம். அவ்வாறு வாழ்ந்த ஒருவரை கும்பல் ஒன்று கொலை செய்ததை இஸ்லாம் எந்த விதத்திலும் ஏற்காது. இந்த படுகொலையை அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

சில  தனிப்பட்ட நபர்கள் செய்த தவறுக்கு ஒரு சமூகத்தை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் தீர்வாகாது.

கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள அன்சார்த் எந்த ஜமாத்-திலும் இருப்பதாக தெரியவில்லை. படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதவிகளை செய்வோம். 

இளைஞர்கள் சிலர் தீய வழியில் செல்வதை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இஸ்லத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து. அவ்வாறு கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை தான் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...