திருப்பூரில் அரச பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி - மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர், அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த உயிர்காக்கும் நீச்சல் இலவச பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்றார்.

திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதம் தோறும் 20 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு காலை மாலை என இரண்டு வேலைகளிலும் இலவசமாக நீச்சல் பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.



வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சிகள் நடக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் நீச்சல் பயிற்சிக்காக ஆகும் செலவு அனைத்தையும் ரோட்டரி சங்கமே ஏற்றுக்கொள்வதோடு ஆண்டு முடிவில் நீச்சல் பயிற்சியில் தகுதி பெரும் மாணவர்களை மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க செய்ய உள்ளனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சியை துவக்கி வைத்து நீச்சல் குளத்தில் மாணவர்களுடன் நீச்சல் அடித்து ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தினார்.

மேலும் நீச்சல் பயிற்சிகளை முடிக்கும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் நீரில் மூழ்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தாங்கள் நீச்சல் பழகியதோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்ற மாணவர்களையும் நீச்சலில் பழக ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...