யாரையும் நம்பி தனிப்பட்ட புகைப்படம், வீடியோக்களை அனுப்பாதீர்கள் - கோவையில் பெண்களுக்கு அறிவுறுத்திய முன்னாள் டிஜிபி..!

கோவை துடியலூர் பகுதியில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மேம்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, பெண்கள் பாதுகாப்பு குறித்து மாணவிகளிடையே கலந்துரையாடினார்.


கோவை: நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தங்களது விவரங்களை, புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை பகிர்வதால் பல்வேறு சைபர் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது.

இவற்றை தடுக்கும் பொருட்டு மாநில மற்றும் அந்தந்த மாவட்ட சைபர் கிரைம் பிரிவுகள் மூலம் பள்ளி, கல்லூரிகளில் மற்றும் இணையம் மூலம் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தனிப்பட்ட புகைப்படங்களை வீடியோக்களை செல்போன்கள் மூலம் பகிர்வதால், பெண்கள் எந்த மாதிரியான இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பது குறித்து கோவையில் செவிலியர் மாணவிகளிடையே தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துரையாடினார்.



கோவை துடியலூர் அருகே உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மேம்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டார். அப்போது மாணவிகளிடையே பேசிய அவர், தன் வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளையும், தான் கோவையில் ஆணையராக பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.

மேலும், பெண்கள் அவர்களுடைய தனிப்பட்ட விவரங்களை, புகைப்படங்களை வீடியோக்களை பொதுவெளியில் மற்றும் செல்போன்கள் மூலம், அறிமுகம் இல்லாத நபர்களுடன் பகிர்வதால் எந்த மாதிரியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை விரிவாக மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.



தொடர்ந்து, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஒரு மாணவி, பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சைலேந்திர பாபு, பெண்கள் செல்போன்களை பயன்படுத்தும் போது யாரையும் நம்பி தங்களது தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப கூடாது. அது பாதுகாப்பானது அல்ல. அதை வைத்து உங்களை பிளாக் மெயில் செய்வார்கள் என்று எச்சரித்தார்.



தொடர்ந்து, மாணவிகளிடையே கலந்துரையாடிய முன்னாள் டிஜிபி, அவர் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கி மாணவிகளை வாழ்த்தினார்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...