தாராபுரத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி வட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது, தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். வேளாண் உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், வேளாண் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்றைய தினம், தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...