உடுமலையில் முறைகேடாக மது விற்பனை 4 பேர் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவாட்டம் உடுமலையில் முறைகேடாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: முறைகேடாக மது விற்பனை செய்தவர்களை தனிப்படை அமைத்து திருப்பூர் காவல்துறை கைது செய்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சில்லறை மது விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உடுமலையைச் சேர்ந்த முஸ்தபா(54), மடத்துக்குளம் தாலுக்கா கணியூரை சேர்ந்த முகமது ஷேக்(32), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்(35), மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி(38) ஆகியோர் சில்லறை மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து உடுமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...