வால்பாறை எஸ்டேட் பகுதியில் இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை பலி

வால்பாறையை அடுத்துள்ள சக்தி எஸ்டேட் அறுகாமையில் உள்ள மகாலட்சுமி எனும் எஸ்டேட் பகுதியில் ஏலக்காய் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் ஊடுறுவி பயிர்களை சேதம் செய்துவிடுவதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், மகாலட்சுமி எஸ்டேட் ஏலக்காய் தோட்டத்தில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது எஸ்டேட் பணியாளர்கள் அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு ஒரு யானை இறந்துகிடப்பது தெரியவந்தது.



இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் சக்திவேல் மற்றும் சந்திரன், கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானையின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தி, பின் யானையில் உடலை சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டுச்சென்றனர்.



முன்னதாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறந்து 10 நாட்களுக்கும் மேலாகியிருக்கும். தற்போது வன விலங்குகளுக்கு உணவாக இதனை இங்கேயே விட்டுச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...