திருப்பாவை பாடல்களை பாடினால் மழை வரும் என சடகோப ராமானுஜ ஜீயர் உடுமலை திருப்பதி கோவிலில் பேட்டி

முழு நிலவான ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று உடுமலை திருப்தி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் கலந்துகொண்டார்.


திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் பக்தர்களுக்கு அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.



முழு நிலவான ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.



இதில் கலந்து கொள்வதற்காக மேல்கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருப்பதி வேங்கடேச பெருமாள், பத்மாவதிதாயார், ஆண்டாள் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் எழுந்தருளி அருள்பாளிக்கும் கடவுள்களுக்கு சிறப்பு பூஜையை ஜீயர் நடத்தி வைத்தார்.



இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஜீயர் பக்தர்களுக்கு அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, முழு மனதோடு கடவுளிடம் சரணடைந்தால் நிச்சயம் அருள் பாலிப்பார். இதற்காக நமக்குள் இருக்கும் குறைகளை முதலில் நீக்க வேண்டும். பின்னர் கடவுளிடம் பிரார்த்தனை வைக்க நினைத்ததை நிறைவேறும். மேலும் கோவிலில் நம்மால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும். தற்போது போதிய அளவில் மழைப் பொழிவு இல்லை. இதனால் மழை வேண்டி ஆண்டாளை நினைத்து மனமுருகி திருப்பாவை பாடல்களை 30 நாட்கள் தொடர்ந்து பாட வேண்டும். 31-வது நாள் பெருமாள் ஆசியுடன் நிச்சயம் மழைப் பொழிவு ஏற்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...