வறட்சி நிவாரண நிதியில் கோவைக்கு அதிகபடியாக ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகர மாவட்ட செயலாளர் அருண்குமார் நீக்கப்பட்டதை அடுத்து புதிய செயலாளராக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, இன்று அமைச்சர் எஸ்.பி,வேலுமணி முன்னிலையில் அம்மன் அர்ஜுனன் பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், கோவைக்கு அறிவிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கோவை வர உள்ளார்.

தொடர்ந்து, கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றப்படும். வறட்சி நிவாரண நிதியில் கோவை மாவட்டத்திற்கு அதிகபடியாக 180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தென்னை விவசாயத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டுமானால் தற்போதைய ஆளுங்கட்சி தான் வெற்றி பெற வேண்டும்.

மேலும், திமுக-வே நமக்கு எதிரி எனவும், ஒற்றுமையாக இருந்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....