2017- 18 ஆண்டிற்கான தமிழக பட்ஜட்டை வரவேற்பதாக சைமா தலைவர் கே.கே.ராஜன் தகவல்

தமிழக அரசின் 2017- 18 ஆம் ஆண்டிற்கான பட்ஜட் வெளியீடானது வரவேற்கத்தக்கதாக உள்ளது என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசின் புதிய பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க தமிழக அரசிற்கு சைமா சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் 7 ஆயிரம் கோடி கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்நாட்டில் விவசாயிகளுக்கு தேவையான பம்புசெட்டிகளின் விற்பனை அதிகரிக்கும்.

மேலும், புதிய தொழில்முனைவோர் இணையதளம் மூலம் கடன்பெறும் திட்டத்தின் மூலம் அவர்களது வேலைப்பளு மற்றும் நேரம் விரையமாவது குறையும்.

தமிழக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் நல்ல வளர்ச்சியை எட்ட முடியும். கோவை மாநகரத்திற்கும் சிறப்பு கவணம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

மேலும், கோவையில் புதிய தொழிற்பேட்டைகளை நிறுவ மற்றும் ஒருவழித் திட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனுமதி கொடுக்கும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பிரத்யேக சிறிய மற்றும் நடுத்தர நிறுவன வர்த்தக வளாகங்களை அமைக்க வேண்டும் என தனது அறிக்கையின் மூலம் சைமா தலைவர் கே.கே.ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...