திருமூர்த்தி அணையில் புதர் மண்டி காணப்படும் பூங்கா - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை அருகே புதர் மண்டி காணப்படும் திருமூர்த்தி அணை பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணை வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.



குறிப்பாக இப்பகுதியில் பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி மலை அவணலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணைப்பகுதியில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன.

பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் இருக்கைகள் உபகரணங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ள காரணத்தால் பூங்காவை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...