உடுமலை பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை - தாய்மார்கள் தவிப்பு

உடுமலை பேருந்து நிலையத்தில் எப்போதும் பாலூட்டும் அறை பூட்டியே கிடப்பதால், குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


திருப்பூர்: பூட்டி இருக்கும் பாலூட்டும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பயணியர் செல்கின்றனர். இதில், உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கும், மூணார் வரை குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்களும் அதிகம் உள்ளனர்.அடிப்படை வசதிகள் பஸ் ஸ்டாண்டில் இருந்தும், பயன்படுத்த முடியாமல் இருப்பது பலருக்கும் மனவேதனை அளித்து வருகிறது.

பஸ் ஸ்டாண்டில், பாலுாட்டும் தாய்மார்களுக்கென தனி அறை உள்ளது. இந்த அறை எப்போதும் பூட்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பசியாற்ற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்யும் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளின் பசியாற்ற இடம் தேடி கடைகளில் அனுமதி கேட்கும் அவலத்தில் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடுமலை பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...