ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் இன்று 'இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா' கொண்டாட்டம்

கோவை மாவட்டம், கோவைப்புதூரில் செயல்பட்ட வரும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி முனைவர் இளசை. சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களும், நற்சிந்தனைகளும் உடையவர்களாக விளங்க வேண்டும். சமூக அக்கறை உடையவர்களாக தொண்டாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் எல்லோரையும் பாராட்ட வேண்டும்.  இன்று சமுதாயத்தில் பிறரை பாராட்டாமல் குறை கூறியே வருகின்றனர். பிறரின் குறையினை குற்றமாக கருதாமல் அவற்றினை அவர்கள் புரியும்படி திருத்த வேண்டும்.



பிறரை பாராட்டி பழக கற்றுக் கொள்ளுங்கள். நாம் செய்யும் செயல்களில் புதுமையினைப் புகுத்த வேண்டும்.  காலத்திற்கேற்றாற் போல் நாம் நமது செயல்களைச் செய்ய வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும். பிறரிடம் கையேந்தாமல் சொந்தமாக சம்பாதித்து தனது நிலையினை உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.

இவ்விழாவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பி.பிரியா வரவேற்புரை வழங்கினார். முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து வகுப்புகளில் படிப்பில் முதலிடத்தினைப் பெற்ற மாணவர்கள், பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இதில் பல போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்று வணிகவியல் துறை ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை கணிதத்துறை வென்றது. முதல்வர் முனைவர் வி.இராதிகா கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். நிரைவாக கணினி அறிவியல் துறைத்தலைவர் சீமாதேவ் அக்ஷதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...