ஓலா மற்றும் உபர் உள்ளிட்டவற்றின் போட்டிகளை எதிர்கொள்ள மூவ்லி நிறுவனத்துடன் கைகோர்த்த உழைக்கும் கரங்கள்

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உழைக்கும் கரங்கள் ஆட்டோ சேவை உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கம் மூவ்லி நிறுவனத்துடன் இணைந்து மொபைல் செயலி சேவையினை உருவாக்கியுள்ளது.



செயலிகள் மூலம் இயக்கப்படும் டேக்சி உள்ளிட்ட ஆட்டோ சேவையினால் நாடுமுழுவதும் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து நடுத்தர ஆட்டோ ஓட்டுநர்கள் ஓலா, உபர் உள்ளிட்ட டேக்சி சேவையினை எதிர்த்தும், போட்டியிட்டும் வருகின்றனர். இதுபோன்ற பெரிய நிறுவனங்களின் போக்குவரத்து சேவையினால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களால், தங்களது வாகனத்தின் வாடகை கூட செலுத்தமுடியாமல் திவாலாகின்றனர்.



இந்நிலையில், உழைக்கும் கரங்கள் ஆட்டோ சங்கமும், மூவ்லி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் முன்னோடியாக ஒரு டேக்சி சேவை செயலியினை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியின் மூலம் மக்களின் சேவைக்கு கோவை மாவட்டத்தில் 375 டேக்சி, ஆட்டோ வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

இதற்காக, கூடுதல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும், பயிற்சியினையும் மூவ்லி ஆதரவாக வழங்கவுள்ளது. இந்த கூட்டமைப்பின் முயற்சி சமுதாயத்திலும், சந்தை நிலவரத்திலும், டேக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என மூவ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து உழைக்கும் கரங்கள் தலைவர் பி.ராஜா கூறுகையில், இந்த செயலியினாது மிகப்பெரும் டேக்சி சேவை நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு வந்த உள்ளூர் ஓட்டுநர்களுக்கு ஒரு நிவாரனமாக அமைந்துள்ளது. எங்களுக்கென தனி அங்கீகாரம் கிடைத்ததைப் போல உணர்கிறோம். வாடிக்கையாளர்களிடமும், ஓட்டுநர்களிடமும் இம்முயற்சி நல்ல நட்புறவை ஏற்படுத்தும். இதன் மூலம் விரைவில் எங்களது வாழ்வாதாரம் உயரும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...