சுங்கம் பணிமனை கிளை மேலாலரைக் கண்டித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிமனை முன்பு போராட்டம்


கோவை சுங்கம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளரை கண்டித்தும், செம்மேடு பகுதியில் இயக்கப்பட்ட பேருந்தின்  ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தக்கியவர்களை கைது செய்யக் கோரியும், பேருந்துகளை இயக்க மறுத்து பணிமனை முன்பாக  50 க்கு மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நேற்று முந்தினம், கோவை வெள்ளிங்கிரி அடிவாரத்தில் இருந்து  காந்திபுரம்  நோக்கி வந்து  அரசு பேருந்தை,  செம்மேடு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் மறித்து உள்ளனர். குடி போதையில் இருந்த காரணத்தால், பேருந்தை முன்னேரி செல்ல வழிவிடாமல் தகராரில் ஈடுபட்டதுடன், ஓட்டுநர் ராஜு மற்றும் நடத்துனர் செந்திலை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக ஆலந்துறை காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த ராஜு, விசாரணைக்காக காவல்நிலையம் செல்ல வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் , கிளை மேலாளர் அனுமதி அளிக்க மறுத்து பேருந்தை இயக்க வற்புறுத்தி உள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்தத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்  50 க்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை மேலாளரின் அலட்சிய போக்கை கண்டித்தும், செம்மேடு  அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போராட்டம் காரணமாக சுங்கம் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததை அடுத்து அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக போராட்டம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...