விஸ்வகர்மா ஜெயந்தி விழா - பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோலாகலம்!

விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு தொடர் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அரசு மருத்துவமனையில் பிறந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.


கோவை: தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தொடர் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா,மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவானதுதேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 25க்கும் மேற்ப்பட்ட ஏழை கூலித் தொழிலாளர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட தலைவர் T.K.ராஜேந்திர பிரசாத் தலைமையிலும், மாநிலத் துணை தலைவர் J.புவனேஷ்வரன் முன்னிலையிலும் மாநிலத் தலைவர் C.பாண்டித்துரை ஆசியுடன் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பம் பங்கேற்ற மாபெரும் கலை நிகழ்ச்சியும், அமைப்பு சாராதொழிலாளர்கள் விழிப்புணர்வு மாபெரும் பொதுக்கூட்டம் கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்றது.



இதில் 5 ஏழை, எளிய பெண்களுக்கு தையல் மிஷன், 2. ஆண்களுக்கு அயர்ன் பாக்ஸ், மேலும் 150க்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 20 நபர்களுக்கு சீருடை, கட்டிட தொழிலாளர்கள் 35 நபர்களுக்குதொழில் உபகரணங்கள், ஆசாரி தொழிலில் ஈடுபட்டு வரும் 150 நபர்களுக்குதேவையானஉபகரணங்கள் வழங்கப்பட்டன.



இதில் பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...