விஸ்வகர்மா ஜெயந்தி விழா - பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோலாகலம்!

விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு தொடர் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அரசு மருத்துவமனையில் பிறந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.


கோவை: தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தொடர் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா,மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவானதுதேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 25க்கும் மேற்ப்பட்ட ஏழை கூலித் தொழிலாளர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட தலைவர் T.K.ராஜேந்திர பிரசாத் தலைமையிலும், மாநிலத் துணை தலைவர் J.புவனேஷ்வரன் முன்னிலையிலும் மாநிலத் தலைவர் C.பாண்டித்துரை ஆசியுடன் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பம் பங்கேற்ற மாபெரும் கலை நிகழ்ச்சியும், அமைப்பு சாராதொழிலாளர்கள் விழிப்புணர்வு மாபெரும் பொதுக்கூட்டம் கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்றது.



இதில் 5 ஏழை, எளிய பெண்களுக்கு தையல் மிஷன், 2. ஆண்களுக்கு அயர்ன் பாக்ஸ், மேலும் 150க்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 20 நபர்களுக்கு சீருடை, கட்டிட தொழிலாளர்கள் 35 நபர்களுக்குதொழில் உபகரணங்கள், ஆசாரி தொழிலில் ஈடுபட்டு வரும் 150 நபர்களுக்குதேவையானஉபகரணங்கள் வழங்கப்பட்டன.



இதில் பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...