அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் அடையாள அட்டைகளை திருப்பி அளிப்போம் - கோவை அறிவொளி நகர் மக்கள் அறிவிப்பு

அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராவிட்டால், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீசிவிடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.



அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இது குறித்து கூறிய அவர்கள் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக அங்கே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வீசி செல்வோம் எனவும் தெரிவித்து சென்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...