அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் அடையாள அட்டைகளை திருப்பி அளிப்போம் - கோவை அறிவொளி நகர் மக்கள் அறிவிப்பு

அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராவிட்டால், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீசிவிடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.



அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இது குறித்து கூறிய அவர்கள் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக அங்கே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வீசி செல்வோம் எனவும் தெரிவித்து சென்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...