உடுமலையில் ஓணம் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய கேரள மக்கள்!

ஓணம் பண்டிகையையொட்டி உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



திருப்பூர்: உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையையொட்டி, தங்கள் வீடுகளில் அத்த பூக்கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் ராமசாமி நகர், செந்தூர் கார்டன், கிரீன் பார்க் லே அவுட் உட்படபல்வேறு பகுதிகளில் வசிக்கும்மலையாள மக்கள் ஓணம்பண்டிகையை பாரம்பரியமான முறையில்உற்சாககொண்டாடினர்.



இதனையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர். உறவினர்கள், நண்பர்களுக்குவாழ்த்துக்களை பரிமாறியும் பாரம்பரியமான விளையாட்டுகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

இதுகுறித்து மலையாள மக்கள் கூறியதாவது,

ஓணம் பண்டிகை வருடம் தோறும்பத்து நாள் கொண்டாடும் நிலையில், இறுதி நாளில் ஓணத்தைமிக சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். மேலும் மாவலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் இட்டும், களிமண்ணால் மாவலி உருவத்தை வீட்டின் முன்பு வழிபாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...