சசிகலாவின் போஸ்டர் ஒட்டியதில் இந்து முன்னணி, தேவர் அமைப்பு இடையே மோதல் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

சசிகலா போஸ்டர் ஒட்டியதில் இந்து முன்னணி-தேவர் அமைப்பு இடையே ஏற்பட்ட மோதலில், தேவர் அமைப்பை சேர்ந்த தங்கபாலு என்பவர் அறிவாளால் வெட்டப்பட்ட நிலையில், இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி தேவர் அமைப்பு சார்பில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.



திருப்பூர்: இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவர் அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வெள்ளியங்காடு பட்டுக்கோட்டையார் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாலு. இவருக்கு சொந்தமாக கடைகள் உள்ளது அதனை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா பிறந்த நாளை ஒட்டி இவரது கடை ஷட்டரில் சசிகலா பிறந்தநாள் வாழ்த்து குறித்த போஸ்டர் ஒட்டியுள்ளார்.

இதனை இந்து முன்னணியினர் கிழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து முன்னணியை சார்ந்தவர்களுக்கும் தங்கபாலுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்து முன்னணியை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட நபர்கள் தங்கபாலுவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. மேலும் தங்கபாலுவை கூரிய ஆயுதங்களாலும் கிரிக்கெட் மட்டை ஆகியவை கொணடு தாக்கி படுகாயம் ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த தங்க பாலு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் படுகாயம் அடைந்த தங்கபாலுவிற்கு ஆதரவாக தேவர் அமைப்பைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும், தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...