உடுமலையில் உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலம்..! - 2000 கலைஞர்கள் பங்கேற்று அசத்தல்

உடுமலை அருகே உலக சாதனைக்காக நடைபெற்ற பவளக்கொடி வள்ளி கும்மியாட்டத்தில் இராண்டாயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டு உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடினர்.



திருப்பூர்: அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒன்றாக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த அசத்தல் ஆட்டத்தை ஏராளமானோர் ஒன்றுகூடி ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்குபெறும் பவள கொடி கும்மியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



அழிந்து வரும் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் பள்ளியொன்றில் நடைபெற்ற பள்ளி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் இடம்பெற்றன.



குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர்.



உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகராட்சி முன்னாள் தலைவர் சி வேலுச்சாமி, சக்தி கலைகுழு ஆசிரியர் மகாலிங்கம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் கருப்பாயி, ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன வள்ளி ராஜசேகரன், ரயில்பயணிகள் ஆலசோணை குழு உறுப்பினர் உடுமலை சத்யம் பாபு, உடுமலை ஓன்றிய துணை செயலாளர் உரல்பட்டி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...