கோவையில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கோவை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் விதிமீறல் புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல்குவாரிகளுக்கு 44 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாகவும் கூறி பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக, நான்கு கல் குவாரிகளுக்கு, கோவை மாவட்ட நிர்வாகம், 44 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கூறியதாவது,

கோவை மாவட்டத்தில் உள்ள 140 குவாரிகள் வருவாய்த்துறை மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளது. விதிமீறல் செய்பவர்களுக்கு அதிகாரிகள் அதிக அபராதம் விதித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் உள்ள ஏழு குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வருவாய்த்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்ட 4 கல் குவாரிகளுக்கு 44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...