கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் - வருமானவரித்துறை அறிவிப்பு

கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் எனவும் இந்த தேதி கட்டாயம் நீட்டிக்கப்படாது எனவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவையில் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார், முதன்மை ஆணையர் திருமலைக்குமார், துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய கிருஷ்ணகுமார், மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவிப்பின் ஒரு கட்டமாக கருப்பு பணத்தை கணக்கில் காட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் வருகிற மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் கருப்பு பணம் குறித்த தங்கள் தகவல்களை வருமான வரித்துறையில் அளித்து அபராதம் மட்டும் செலுத்தி சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் இருந்து விளக்கு பெறலாம் எனக்கூறிய அவர் இந்த திட்டம் கட்டாயமாக மார்ச் 31க்கு பிறகு நீட்டிக்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

கடந்த 2 வாரங்களில் கோவை மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுகளை செய்துள்ளதாகவும் இதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். கருப்பு பணம் தொடர்பான தகவல்களை அளிக்க சலான் 287ஐ மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...