பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி கோவையில் மனு தர்ம நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் மணியம்மை பிறந்த நாளை முன்னிட்டு, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள மனு தர்ம நூலை கொளுத்தும் போராட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.



இதன்படி அவ்வமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய மனு தர்ம நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், சமூக நீதி தத்துவத்திற்கு எதிராகவும், சாதி பிரிவினைகளை ஊக்குவிக்கும் வகையில் மனு தர்மம் உள்ளதாகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி மனு தர்ம நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...