தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம்

கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப்போக்கு காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை நீலாம்பூர் பகுதியில் ராயல் ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி ஒன்றிய வட்டாரா வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் என்பவர், சளி தொந்தரவு காரணமாக கடந்த செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வியாழக்கிழமை வீடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென, வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் செவிலியர்களுக்கு தகவல் அளித்தும், அரை மணி நேரத்திற்கு மேலாகியும், மருத்துவர்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர், வந்த மருத்துவர்கள் நோயாளியை தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்ததாகவும், மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது உறவினர் கூறுகையில், மூச்சு தினறல் ஏற்பட்டது குறித்து தகவல் அளித்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மருத்துவர்களோ செவிலியர்களோ யாரும் வந்து பார்க்க வில்லை. பின்னர் வந்த மருத்துவர்களும் நோயாளிக்கு ஆக்சிஜன் கூட வைக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், மருத்துவமனையில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, அவரது உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவ நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து மருத்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...