கோர்பா - எர்ணாகுளம் விரைவு ரயிலில் பயணியிடம் 10 சவரன் நகையை திருடிய கோவை இளைஞர் கைது!

கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த சேலத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரிடம் 10 சவரன் நகையை திருடிய கோவையை சேர்ந்த ராஜேஷ்குமார் (41) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் பயணியிடம் 10 சவரன் நகையை திருடிய கோவையை சேர்ந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி (61). இவர் கடந்த 11 ஆம் தேதி கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில், சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி தனது மகள் வீட்டுற்கு சென்றுள்ளார். 

அப்போது திருப்பூர் - கோவை இடையே வந்த போது அவரது பையில் வைத்திருத்த 10 சவரன் நகை மாயமானது. இதையடுத்து ரத்தினசாமி கோவை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த கோவை குறிச்சியை சேர்ந்த ராஜேஷ்குமார் (41) என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். அப்போது அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் நகைகளை வைத்திருந்தது தெரியவந்தது. 



இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...