வால்பாறை, நடுமலை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

வால்பாறையை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையின் சுவர் மற்றும் கதவு, ஜன்னல் ஆகியவற்றை உடைத்து ஒற்றை காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை அரிசியை தின்றது.



இச்சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் கூச்சல் எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த காட்டுயானை வால்பாறை ஐயப்பன் கோவில் பகுதியிக்கு சென்று நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் யானையை காட்டிற்குள் விரட்டினர்.



தொடர்ந்து வால்பாறைக்கு உட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு வருவதால், கும்கி யானைகளை வைத்து காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இதேப் போல் கடந்த இரு தினத்திற்கு முன்பு சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டுயானை கூட்டம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அழகர்சாமி, ஏசையன், பழனிசாமி ஆகியோரது வீட்டின் முன்புறம் இருந்த தகர செட்டுகளை உடைத்தது. தொடர்ந்து காட்டு யானை பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...