பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சூசகம்!

கோவையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருப்பதால் இதுபோன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. நாங்கள் யாரென்று பாஜகவுக்கு முதல்வர் தெரியவைப்பார் என்றார்.



கோவை: பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை என்றும், நாங்கள் யாரென்று முதல்வர் பாஜகவுக்கு தெரியவைப்பார் எனவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவையில் ஹோப் கல்லூரி அருகிலுள்ள டைடல் பார்க்கை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 







கோவைக்கு இன்னும் பல புதிய திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். கோவையில் இன்னும் பல தொழில்கள் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான நிலங்களை தேர்வு செய்து வருகிறோம். 

பிரபல லூலு நிறுவனத்தை தமிழகத்தில் நுழைய விட மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் இன்று அந்த நிறுவனத்தை கோவையில் திறப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் சொன்னார் நாங்கள் திறந்து வைக்கிறோம் என இதுபோன்று சிறுபிள்ளை தனமாக பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க தேவையில்லை. 

மேலும் செந்தில்பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக இதுபோன்று சிறுபிள்ளை தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவை பற்றி இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை. இது போன்ற பல முதலைகளை சந்தித்த இயக்கம் திமுக. 

இந்த அடக்குமுறையிலிருந்து மீண்டும் வலிமையோடு எழுந்து வெற்றி நடைபோடுவோம். திமுகவைக் அடக்க வேண்டுமென்று நினைத்தால் இன்னும் வேகமாக எழுவோம். இதுக்கெல்லாம் பயந்து போகின்ற இயக்கமில்லை. கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. 

பதவியில் இருக்கிறார்கள் என்று சிலர் ஆடுகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருக்கிறது என்பதால் அவர்களிடம் உள்ள துறையை ஏவிவிட்டு இது போன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. முதல்வர் நாங்கள் யாரென்று பாஜகவுக்கு தெரியவைப்பார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...