ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள் - குவியும் பாராட்டு!

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் யுவ ஆதித்தன் (31) என்ற ஏரோநாட்டிகல் பட்டதாரி வடிவமைத்துள்ள சோலார் பேனல் உதவியுடன் இயங்கும் இ சைக்கிள் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும், இவர் அடுத்ததாக இ ஆட்டோவை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் கைதி ஒருவர் வடிமைத்துள்ள இ சைக்கிள் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த இவர், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த பழைய சைக்கிளை பார்த்து அதில் ஏதாவது செய்ய திட்டமிட்டார். அதன் அடிப்படையில் அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயன்றார்.



இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, பிளக் மற்றும் டைனமோ உதவியுடன் சார்ஜ் செய்ய முடியும். வழக்கமான சைக்கிள் ஆகவும், தேவைப்பட்டால் இ பைக்காகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். போலீஸ் பேட்ரோல், நகர்புறத்தில் பயணம் உள்ளிட்டவைகளுக்கு இவை பயன்படும் என தெரிகின்றன. 



தற்போது முதல் சைக்கிளை வடிவமைத்து இருக்கும் இவர், இன்னும் 10 சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டு இருக்கின்றார். இதேபோன்று இ ஆட்டோ தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். 

ஏரோநாட்டிக்கல் படித்த பொறியியல் பட்டதாரியான இவர், ஏதோ ஒரு சூழலில் கொலை குற்றத்துக்கு உள்ளாகி, சிறைவாசம் அனுபவிக்கும் நிலையில், கற்ற கல்வியை புத்தி கூர்மையுடன் பயன்படுத்தி இதுபோன்று இ பைக், இ ஆட்டோ தயாரிக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கின்றன.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...