கோவையில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்களில் 12 மணி நேர சேவை!

கோவை கூட்செட் ரோட்டில் உள்ள கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மண்டல தலைமை தபால் நிலையத்திலும் 12 மணி நேர சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்விரு தபால் நிலையங்களும் காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் மேற்கு மண்டல தலைமை தபால் நிலையம் ஆகிய 2 தலைமை தபால் நிலையங்களில், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.



கோவை கூட்செட் ரோட்டில் கோவை கோட்ட தலைமை தபால் நிலையமும், ஆர்.எஸ்.புரத்தில், மேற்கு மண்டல தலைமை தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரையில் சேமிப்பு வங்கி தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன.

மாலை 4:00 மணி வரை மணி ஆர்டர் புக்கிங், இரவு 7:00 மணி வரை பதிவு தபால், பார்சல் விரைவு தபால் சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. வாடிக்கையாளர் வசதிக்காக, நேற்று முதல், இவ்விரு தலைமை தபால்நிலையங்களிலும், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இனி காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை, அனைத்து வகையான சேமிப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால், பார்சல், வி.பி.எல்., வி.பி.பி., தபால் ஆகிய சேவைகளை, இவ்விரு தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...