கோவையில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்களில் 12 மணி நேர சேவை!

கோவை கூட்செட் ரோட்டில் உள்ள கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மண்டல தலைமை தபால் நிலையத்திலும் 12 மணி நேர சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்விரு தபால் நிலையங்களும் காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் மேற்கு மண்டல தலைமை தபால் நிலையம் ஆகிய 2 தலைமை தபால் நிலையங்களில், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.



கோவை கூட்செட் ரோட்டில் கோவை கோட்ட தலைமை தபால் நிலையமும், ஆர்.எஸ்.புரத்தில், மேற்கு மண்டல தலைமை தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரையில் சேமிப்பு வங்கி தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன.

மாலை 4:00 மணி வரை மணி ஆர்டர் புக்கிங், இரவு 7:00 மணி வரை பதிவு தபால், பார்சல் விரைவு தபால் சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. வாடிக்கையாளர் வசதிக்காக, நேற்று முதல், இவ்விரு தலைமை தபால்நிலையங்களிலும், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இனி காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை, அனைத்து வகையான சேமிப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால், பார்சல், வி.பி.எல்., வி.பி.பி., தபால் ஆகிய சேவைகளை, இவ்விரு தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...