கோவை திறந்தவெளி சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிறைவாசிகளுக்கு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் சிறைவாசிகள் அவர்களின் தண்டனை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும் அதன் மூலம் வருவாய் ஈட்டவும் விவசாய தொழிலை முதன்மையாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். 

மேலும் அவர்களுக்கு கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். 



காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் உலக தேனீ வளர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை "கவின் தேனீ பண்ணை சார்பாக தேனீ வளர்ப்பு நிபுணர் ரஞ்சித்பாபு மூலம் சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சியும், அதனை விற்பனை செய்யும் முறைகள் குறித்து சிறைவாசிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...