ஓலா, ஊபருக்கு தடைவிதிக்க கோரி திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

ஓலா மற்றும் ஊபர் போன்ற கார்ப்பரேட் டாக்சி நிறுவனங்களால், ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதால், அவற்றுக்கு தடை விதிக்க வலியுறுத்தி, திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: ஓலா, ஊபருக்கு தடைவிதிக்க கோரி திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான ஊபர், ஓலா உள்ளிட்ட கார்ப்பரேட் டாக்ஸி நிறுவனங்களை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் எப்.சி. காட்டும் போது செலுத்த வேண்டிய தொகையினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...