கோவையில் 22.5 டன் பழங்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

கோவையில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு நடத்திய அதிரடி ஆய்வில், ரசாயன கலந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 22.5 டன் மாம்பழங்கள் மற்றும் சாத்துகுடி பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த மாம்பழங்களை உரம் தயாரிப்பதற்காக குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.



கோவை: தமிழ் நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தமிழ்செல்வன் தலைமையில்,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் பகுதில் உள்ள வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பெரிய கடை வீதி -I, மற்றும் II, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 8 குழுவாக மொத்தம் 16 பேர் அடங்கிய குழுவினர் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.



அதில், 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 22,618 (22.5 டன்) எடையும், மேலும் சுமார் 2,510 கிலோ (2.5 டன்) எடை அளவு உள்ள சாத்துகுடி ஆக மொத்தம் 25,128 கிலோ (சுமார் 25 டன்) எடை பறிமுதல் செய்யப்பட்டன.



அவை அனைத்தும் மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அழிக்கப்பட்டு, அதன் பின்னர் அதனை உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு, சுமார் ரூபாய் 12,56,400/. மேலும், பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட 16 பழக்கடை மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் (Notice) நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுபோன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில், செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய இரசாயன பாக்கெட்டு அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இதுபோன்ற கார்பைட் கல், எத்திலீன் இரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம்.

சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிலக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, இதுபோன்று முறையற்ற விகிதத்தில் இரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள்மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...