பாஜக நிர்வாகி கொலை - பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னையில் கடந்த ஏப்ரல் 27-ல் பாஜகவின் பட்டியலின அணியின் மாநில பொறுப்பாளர் சங்கர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில், பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



கோவை: சென்னையில் பாஜக பட்டியலின நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் கடந்த 27ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணியின் மாநில பொறுப்பாளர் சங்கர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாஜகவின் பட்டியலின அணி சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் நடைபெறும் படுகொலை சம்பவங்களை கண்டித்தும் பாஜக நிர்வாகிகளை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் மாவட்ட தலைவர் வசந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:



தமிழகத்தில் பாஜக பட்டியலின நிர்வாகிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாஜக பக்கம் பட்டியலின மக்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனர்.

இன்றைக்கு போலியாக சமூக நீதி என கட்சிகள் பேசி வருகின்றனர். அவர்களின் வேஷம் கலைந்து பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கட்சி பிஜேபி என இணைந்து வருகின்றனர். இதனால் குறிவைத்து பட்டியலின நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...