வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கன மழை - சுற்றுலா பயணிகள் அவதி!

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால், வால்பாறைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பில் இருந்தே கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது.

வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக இன்று முதல் வரும் மே.3ஆம் தேதி வரை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.



இந்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.



பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.



இதன் காரணமாக வால்பாறை, சின்னக்கல்லார், சின்கோனா, சிறுகுன்றா, ஈட்டியார், பழைய வால்பாறை, ரொட்டி கடை, கருமலை, பச்சமலை, உருள்கள், வாட்டர் பால்ஸ் போன்ற எஸ்டேட் பகுதிகளில் வால்பாறைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...