வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கன மழை - சுற்றுலா பயணிகள் அவதி!

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால், வால்பாறைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பில் இருந்தே கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது.

வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக இன்று முதல் வரும் மே.3ஆம் தேதி வரை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.



இந்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.



பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.



இதன் காரணமாக வால்பாறை, சின்னக்கல்லார், சின்கோனா, சிறுகுன்றா, ஈட்டியார், பழைய வால்பாறை, ரொட்டி கடை, கருமலை, பச்சமலை, உருள்கள், வாட்டர் பால்ஸ் போன்ற எஸ்டேட் பகுதிகளில் வால்பாறைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...