கோவையில் 1000ம் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் போராட்டம், வங்கி சேவை பாதிப்பு.


நிதிதுறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நலனுக்கு எதிராக தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பகுதியாக வங்கி ஊழியர் சங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் பிப்ரவரி 28ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த முடிவு எடுக்கபட்டது. இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் கோவையில் உள்ள அனைத்து வங்கிகளை சேர்ந்த 1000ம் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் கூறும்போது வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஓய்வூதிய பலனுக்கு வருமான வரி முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும், உயிர் நீத்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றார். மத்திய அரசு வங்கிகளை தனியார் மையமாகும் கொள்கையை கைவிடா விட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடு போவதாக தெரிவித்தார். இன்று ஒரு நாள் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் கோவையில் 200 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...