உடுமலையில் ஏ.டி.எம் மையத்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு - குடிமகன்கள் அட்டகாசம்!

உடுமலை அருகேயுள்ள பசுபதி வீதியில் செயல்பட்டு வரும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளையின் ஏடிஎம் மையத்தின் முன் பக்க கண்ணாடியை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்த மதுப்பிரியர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே பசுபதி வீதியில் உள்ள ஏடிஎம் மையத்தின் முன்பக்க கண்ணாடியை மதுப்பிரியர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளை பசுபதி வீதியில் உள்ளது. இந்த வங்கி கிளையில், 500க்கும் மேற்பட்டவர்கள் கணக்கு வைத்துள்ள தோடு, நகை கடன், பயிர் கடன் பெறவும், பரிவர்த்தனை மேற்கொள்ளவும், ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று வழக்கம் போல் வங்கியை, அலுவலர்கள் மூடிச் சென்றனர். இன்று காலை திறக்க வந்த போது வங்கியின் முன் உள்ள ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி உடைந்து கிடந்தது.

வங்கிக்கு எதிரில் பசுபதி வீதி யில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவிலும் மது விற்பனை முறைகேடாக நடந்து வருவதால், போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறியுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு, போதை ஆசா மிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

அரசு மதுபானக் கடையை மாற்ற வேண்டும். என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் மர்ம நபர்கள் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து,ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடியை உடைத்து திருட முயற்சியின் காரணமாக, பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...