புதர் மண்டி கிடக்கும் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலக ஓடுபாதை - சீரமைக்க வலுக்கும் கோரிக்கை!

உடுமலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைக்காக அமைக்கப்பட்ட ஓடுபாதை பராமரிப்பில்லாமல் புதர் மண்டி, செடிகள் முளைத்துள்ளதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஓடுபாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலமாக புதிதாக ஓட்டுனர் உரிமம் எடுத்தல், புதுப்பித்தல், வாகன தகுதி சான்று, வாகனப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.



இந்த அலுவலக வளாகத்தில் ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. மேலும், செடிகள் முளைத்து பராமரிப்பு இல்லாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்பட்டதன் காரணமாக சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியூருக்கு சென்று சேவையை பெறுவதில் ஏற்பட்டு வந்த காலதாமதம் நிவர்த்தி அடைந்தது.

அலுவலக வளாகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட ஓடுபாதையானது, முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் பாதையை சுற்றிலும் புதர் மண்டி, செடிகள் முளைத்து காணப்படுகிறது.

இதனால் அங்கு விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஓடுபாதையை பராமரிப்பு செய்தும், அதை சுற்றி முளைத்துள்ள புதர் மற்றும் செடிகளை அகற்றவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...