கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கரும்புகடை பகுதியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேலுமணி என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து 1டன் ரேஷன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை கரும்புக்கடை திப்புநகர் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒருவர் பைக்கில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்துள்ளார். இதைக்கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்ததில், அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட நபர் போத்தனூர் அன்புநகர் பகுதியை வேலுமணி என்பதும், கரும்புக்கடை சாரைமேடு பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பருடன் சேர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை கேரளாவிற்கு கடத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலுமணியை கைது செய்த போலீசார், அதே பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கூட்டாளியான அஜீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...