கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கரும்புகடை பகுதியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேலுமணி என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து 1டன் ரேஷன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை கரும்புக்கடை திப்புநகர் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒருவர் பைக்கில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்துள்ளார். இதைக்கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்ததில், அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட நபர் போத்தனூர் அன்புநகர் பகுதியை வேலுமணி என்பதும், கரும்புக்கடை சாரைமேடு பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பருடன் சேர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை கேரளாவிற்கு கடத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலுமணியை கைது செய்த போலீசார், அதே பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கூட்டாளியான அஜீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...