கோவை வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தணிக்க வனத்துறையினர் தீவிரம்!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில், கோடைக்காலம் காரணமாக ஏற்படும் வறட்சியை சமாளிக்க வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால், தண்ணீர், உணவுத் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது குறைந்துள்ளது.


கோவை: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார பகுதியில் மருதமலை , ஓணாப்பாளையம், அட்டுக்கல், வெள்ளருக்கம்பாளையம், நரசீபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் போதிய மழை இன்றி வனப்பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள யானை, மயில், புள்ளி மான்கள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள் தாகம் தீர்க்க ஆங்காங்கே வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து அவற்றில் சோலார் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யானைகள் ஒன்று கூடும் இடமான யானை மடுவு உள்ளிட்ட 2இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது தொட்டிகளை பார்வையிட்டு நீர் நிரப்ப ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்காக உப்புக்கட்டிகளும் அருகில் வைக்கப்பட்டுள்ளது. கோவை வனத்துறை சார்பில் கோடைக்காலத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...