கோவையில் பாஜக சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் -ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

கோவையில் பி.எஸ்.ஜி மருத்துவமனையுடன் பாஜக இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தியது. இதில், வடமதுர, என்.ஜி.ஜி.ஓ., காலனி, துடியலூர், பெரியநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.



கோவை: பாஜக சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம், துடியலூரில் நடைபெற்றது.

கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனி கேட் அருகே ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவு பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு மண்டலம் மற்றும் பி.எஸ்.ஜி.மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தியது.



இதில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகல் நலம், தோல் நல சிகிச்சை, எலும்ம்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை, கண் நலம், கண் புரை அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை மற்றும் பல் நலம் குறித்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



இந்த மருத்துவ முகாமில், வடமதுரை, என்.ஜி.ஜி.ஓ காலனி, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்.



இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ பிரிவு மாநில செய்லாளர் டாக்டர்.பாபு, மாவட்ட தலைவர் டாகடர். சுரேந்திரன் முன்னிலையில் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல தலைவர் புவனேஸ்வரன், மருத்துவ பிரிவு டாக்டர்.மகேஸ்வரன் மற்றும் பொருளாளர் சண்முகவடிவேல், செயலாளர்கள் உதயகுமார், பிரபாவதி, ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சாய்சரவணகுமார் உட்பட பலர் செய்திருந்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...