அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி - கோவையில் தாய், மகன் கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் வரையில் மோசடி செய்த வழக்கில், மேட்டுப்பாளையம் தாசனூரை சேர்ந்த மோகன்குமார், அவரது தாய் மணி என இருவரை கைது செய்தனர். இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்(வயது32). இவருடைய தாயார் மணி(வயது53). மனைவி சோபனா(வயது27). இவர்கள், தங்களுக்கு உயர் பதவியில் தெரிந்த நபர் இருப்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பலரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

மேலும், வேலைக்கான போலி ஆணைகளையும் தயார் செய்து பணம் கொடுத்தவர்களிடம் கொடுத்தள்ளனர். இதனை, கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தபோதுதான் அது போலியான ஆணை என்று தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை கொடுத்தவர்கள் அதனைத் திரும்பக் கேட்டும் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

மேலும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பணத்தின் மூலம் வேன் மற்றும் கார்களை வாங்கி மோகன்குமார் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த மோசடி குறித்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ரூ.36 லட்சத்து 7 ஆயிரத்தை பலரிடமும் வசூலித்து மோகன்குமாரிடம் கொடுத்ததாகவும் ,ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த மோசடி குறித்து மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மோகன்குமார், அவருடைய தாயார் மணி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடைய மனைவி சோபனாவிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த மோசடிக்கு பயன்படுத்திய போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தாயும், மகனும் மேலும் பலரிடம் இதுபோன்ற மோசடியை அரங்கேற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, கைதான தாய், மகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...